Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

“கண்ணானே கண்ணே”- இசையமைப்பாளர் இமானுடன் ஒரு சிறப்புச் சந்திப்பு

வாசிப்புநேரம் -

“மண்சார்ந்த பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் ” என்று பிரபல இசையமைப்பாளர் D இமான் 'செய்தி'-க்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது கூறினார்.

அவரது இசைப்பயணம் தொடங்கி 20 ஆண்டுகளாகின்றன. சுமார் 130 திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

“கண்ணானே கண்ணே…”, “வெரசா போகயிலே…” போன்ற பிரபலமான பாடல்களை வழங்கியிருக்கும் இசையமைப்பாளர் இமான் இப்போது சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். 

இமானின் இசை நிகழ்ச்சி நாளை (25 செப்டம்பர்) மாலை 6:30 மணி, Esplanade அரங்கில் நடைபெறவிருக்கிறது.

அவருடன் இணைந்து பிரபல பின்னணிப் பாடகர்களும் நிகழ்ச்சியில் பங்க்கேற்கின்றனர்.

நுழைவுச்சீட்டுகளை https://ticketmaster.sg/activity/detail/22_dimman#synopsis  இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்