பொங்கோல் டிரைவ் புளோக்கின் கீழ்த்தளத்தில் ஆடவரின் சடலம்
வாசிப்புநேரம் -

படம்: envato.com
சிங்கப்பூரில் பொங்கோல் டிரைவில் (Punggol Drive) உள்ள கழக புளோக்கின் கீழ்த்தளத்தில் 65 வயது ஆடவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.
சம்பவத்தின் தொடர்பில் 59 வயதுப் பெண் ஒருவர் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற வியாழக்கிழமை (3 ஜூலை) காலை சுமார் 5:55 மணியளவில் பொங்கோல் டிரைவில் உள்ள புளோக் 654Cஇன் அடியில் ஓர் ஆடவர் படுத்து கிடப்பதாகப் புகார் கிடைத்தது என்று சிங்கப்பூர் காவல்துறை Channel 8 செய்தியிடம் தெரிவித்தது.
காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டது.
ஆடவரின் மரணம் கொலைச் சம்பவம் அல்ல என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
சம்பவத்தின் தொடர்பில் 59 வயதுப் பெண் ஒருவர் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற வியாழக்கிழமை (3 ஜூலை) காலை சுமார் 5:55 மணியளவில் பொங்கோல் டிரைவில் உள்ள புளோக் 654Cஇன் அடியில் ஓர் ஆடவர் படுத்து கிடப்பதாகப் புகார் கிடைத்தது என்று சிங்கப்பூர் காவல்துறை Channel 8 செய்தியிடம் தெரிவித்தது.
காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டது.
ஆடவரின் மரணம் கொலைச் சம்பவம் அல்ல என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others