Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விளையாட்டுத் திடலில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட சிறுவர்களின் தந்தை கைது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 11 வயது மகன்கள் இருவரின் மரணம் தொடர்பில் அவர்களின் 48 வயதுத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

 நேற்று முன்தினம், கிரீன்ரிஜ் கிரசண்ட்டின் (Greenridge Crescent) விளையாட்டுத் திடலில் இருந்த ஓர் ஆடவரிடமிருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை நேற்றுக் கூறியிருந்தது. 

சாத்தியமான அனைத்துத் தடயங்களையும் பின்பற்றி, மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. 

நாளை அவர் மீது கொலைக் குற்றஞ்சாட்டப்படும். அது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்