"வட்டாரப் பாதுகாப்பில் ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டுக்கு முக்கியப் பங்கு"
(படம்: MINDEF)
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டில் இடம்பெறும் நாடுகள் தங்களுக்கு இடையிலான தற்காப்புக் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் 55 ஆண்டுகளாக அந்தக் கூட்டமைப்பில் உள்ளன.
ஷங்ரிலா கலந்துரையாடலுக்கு இடையே, ஐந்து நாட்டுத் தற்காப்பு அமைச்சர்கள் இன்று (31 மே) காலை கூடினர்.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) அவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி உபசரிப்பை வழங்கினார்.
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டின்கீழ், நாடுகளின் ராணுவங்கள் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன.
இத்தகைய சந்திப்புகள், அது குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாக அமைகின்றன.
வட்டாரப் பாதுகாப்பில் ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடு முக்கிய பங்காற்றுகிறது என்று அமைச்சர்கள் கூறினர்.
அது வெளிப்படையாகவும் அதே வேளை அமைதியாகவும் செயல்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.