Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'இரு தரப்புக்கும் மகிழ்ச்சி'- ஆலயத்தில் சேவை செய்யும் முதுமை மறதி கொண்டோர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில்முதுமை மறதியால் சிரமப்படும் மூத்தோரை அடையாளம்  கண்டு பராமரிப்பு வழங்குவதில் சுமார் 70 சமூகக் குழுக்கள் உதவுகின்றன. 
 
32,000க்கும் மேற்பட்டோருக்கு உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில் அங் மோ கியோ பகல்  நேரப் பராமரிப்பு  நிலையத்தில் உள்ள முதுமை மறதி கொண்டோருக்கு உதவி  செய்யும் வாய்ப்புகளை AWWAவும் Lien Foundationஉம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம், இலாயஸ் பார்க் தொடக்கப்பள்ளி, ஜமீயா குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் முதியோர் வாரம் ஒரு முறை சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆலயத்தில் மூத்தோர்  செய்யும் பணிகள்..அது அவர்களை சமூகத்துடன் இணைக்க எவ்வாறு உதவுகின்றது? 

அறிந்துவந்தது 'செய்தி'...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்