"வட்டார ஒருங்கிணைப்பைச் சிங்கப்பூர் முன்னெடுத்துச் செல்லும்"
துணைப் பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) உலகச் சூழலை நெருக்கமாகக் கவனித்து வட்டார ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லும் நாடாகச் சிங்கப்பூர் தொடர்ந்து திகழும் என்று கூறியிருக்கிறார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாநாட்டுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
வட்டாரங்களுக்கு இடையிலான மின்னிலக்கத் தரவுப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் இவ்வாண்டு கையெழுத்திடப்படும் என்று தலைவர்கள் உறுதியளித்தனர்.
எல்லை கடந்த தரவுப் பகிர்வு, மின்னிலக்க வர்த்தகம் ஆகியவற்றை அது ஆதரிக்கும்.
பசுமைப் பொருளாதாரத்தின் வாய்ப்புகள் போன்றவற்றையும் அவர்கள் கலந்துரையாடினர்.