Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடி நடவடிக்கை... 146 சந்தேக நபர்கள் கைது

வாசிப்புநேரம் -

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மேற்கொண்ட இருவார அமலாக்க நடவடிக்கையில் 146 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

தீவு முழுவதிலும் இம்மாதம் 6ஆம் தேதிமுதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 55,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பறிமுதல் செய்யப்பட்டவை:

  • 28 கிராம் போதைமிகு அபின்
  • 234 கிராம் ஐஸ் (Ice) 
  • 173 கிராம் கஞ்சா
  • சிறிய அளவுகளில் கெட்டமைன், கொக்கெய்ன் (Ketamine, cocaine)
  • 10 கிராம் புதுவகை போதையூட்டும் கலவைகள் 
  • 11 எக்ஸ்டசி மாத்திரைகள் (Ecstasy)
  • 1 எரிமின்-5 மாத்திரை (Erimin-5)
  • திரவம் வடிவிலான Gamma-hydroxybutyrate (GHB) நிறைந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் போத்தல்

அமலாக்க நடவடிக்கை இடம்பெற்ற வட்டாரங்கள்:

  • ஜூரோங்
  • மரீன் பரேட் 
  • செங்காங்
  • யீஷுன்

கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்