Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் கலக்கப்பட்ட தேயிலைப் பொட்டலங்கள்; 31 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் தொடர்பில் 31 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதனைத் தெரிவித்தது.  

பிராஸ் பாசா (Bras Basah) வட்டாரத்திலுள்ள ஹோட்டல் அறையிலிருந்து 177,000 வெள்ளி மதிப்புமிக்க போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் நேற்று முன்தினம் (9 மே) அங்கு அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.  

ஆடவர் ஒத்துழைக்க மறுத்ததால் அதிகாரிகள் ஹோட்டல் அறைக்குள் வல்லந்தமாக நுழைந்ததாகக் கூறப்பட்டது. 

2,155 கிராம் கஞ்சா, 65 கிராம் ஐஸ், 5 கிராம் ketamine, 360 கிராம் Ecstasy மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுள் போதைப்பொருள் கலக்கப்பட்ட தேயிலைப் பொட்டலங்களும் அடங்கும்.

போதைப்பொருள்கள் அறையின் வெவ்வெறு பகுதிகளில் மறைத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆடவர் மீது விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்