Skip to main content
மதுபோதையில் வாகனமோட்டியவர்களுக்கு என்ன தண்டனை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மதுபோதையில் வாகனமோட்டியவர்களுக்கு என்ன தண்டனை?

வாசிப்புநேரம் -
மதுபோதையில் வாகனமோட்டியவர்களுக்கு என்ன தண்டனை?

படம்: Orkhan Farmanli/Unsplash

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபோதையில் வாகனமோட்டியதற்காக 5,176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த அமைச்சர் கா சண்முகம் அதனைத் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு விதிக்கப்படும் சராசரி தண்டனை குறித்து
நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் (Jamus Lim) வினவினார்.

அமைச்சர் கா சண்முகம் கடந்த மூவாண்டு நிலவரத்தைப் பகிர்ந்தார்.

வாகனம் ஓட்ட தடை:

3,283 சம்பவங்களில் ஓட்டுநர்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.

40 பேருக்கு வாழ்நாள் முழுதும் தடை.

மற்றவர்களுக்குச் சராசரியாக 38 மாதத் தடை விதிக்கப்பட்டது.

அபராதம்:

3,020 சம்பவங்களில் அபராதம் விதிக்கப்பட்டது.

பிடிபட்டவர்களுக்குச் சராசரியாக 5,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை:

647 சம்பவங்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் புரிந்தோருக்குச் சராசரியாக 45 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்