பொம்மைக்குள் சிகரெட் கடத்தல் - 3 மாணவர்கள் கைது
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/Singapore Customs)
பொம்மைகளுக்குள் சிகரெட்டுகளை வைத்துக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் என்று 8world செய்தி கூறுகிறது.
இந்த மாதம் 22, 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்பில் ஜூரோங் வெஸ்ட்டில் (Jurong West) சீனாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது கடந்த 25ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவருடன் கைதான மேலும் 2 மாணவர்கள் 22, 28 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த மூன்று பேரும் மாணவர் அனுமதி அட்டை வைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்குச் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தீர்வையின் மதிப்பு 1,280 வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் என்று 8world செய்தி கூறுகிறது.
இந்த மாதம் 22, 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்பில் ஜூரோங் வெஸ்ட்டில் (Jurong West) சீனாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது கடந்த 25ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவருடன் கைதான மேலும் 2 மாணவர்கள் 22, 28 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த மூன்று பேரும் மாணவர் அனுமதி அட்டை வைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்குச் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தீர்வையின் மதிப்பு 1,280 வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : Others