பிரபல இந்தியப் பாடகர் ஸுபீன் கார்க் மரணம் - விசாரணை முடிவுகள் 13 மார்ச்சில்
வாசிப்புநேரம் -
பிரபல இந்தியப் பாடகர் ஸுபீன் கார்க்கின் (Zubeen Garg) மரண விசாரணை முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் வந்திருந்த திரு கார்க் கடலில் மூழ்கி மாண்டார்.
கடந்த மாதம் 14ஆம் தொடங்கிய விசாரணையில் 19 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
திரு கார்க் நீந்துவதற்கு முன் மதுபோதையில் இருந்ததைப் போல் தோன்றவில்லை என்றனர் சிலர்.
திரு கார்க்கின் ரத்த மாதிரியில் அதிகளவு மது அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திரு கார்க்கின் மரணத்தில் சூது இல்லை என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் வந்திருந்த திரு கார்க் கடலில் மூழ்கி மாண்டார்.
கடந்த மாதம் 14ஆம் தொடங்கிய விசாரணையில் 19 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
திரு கார்க் நீந்துவதற்கு முன் மதுபோதையில் இருந்ததைப் போல் தோன்றவில்லை என்றனர் சிலர்.
திரு கார்க்கின் ரத்த மாதிரியில் அதிகளவு மது அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திரு கார்க்கின் மரணத்தில் சூது இல்லை என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.
ஆதாரம் : CNA