Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷுன் வீட்டில் பின்னிரவில் தீ

வாசிப்புநேரம் -
யீஷுன் வீட்டில் பின்னிரவில் தீ

(படம்:INSTAGRAM / @LUQMANAFIQ_)

நேற்றுப் பின்னரவு வேளையில் (22 மார்ச்) யீஷுன் அவென்யூ 4இலுள்ள புளோக் 672Cஇல் இருக்கும் ஒரு வீட்டில் தீ மூண்டது.

பின்னிரவு 2.25 மணிவாக்கில் தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

புளோக்கின் 13ஆவது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கை அறையிலிருந்து தீ பரவியதாகக் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'-இடம் தகவல் வழங்கியது.

தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பு புளோக்கில் இருந்த சுமார் 50 பேரைக் காவல்துறையினர் வெளியேற்றினர்.

இலேசாகக் காயமுற்ற மூவரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் பரிசோதித்தனர். அவர்கள் மூவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக 'செய்தி' அறிகிறது.

தீ எதனால் பரவியது என்பதைக் கண்டறிய விசாரணை இடம்பெறுகிறது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்