மானபங்கம் செய்த சந்தேகத்தில் 5 ஆடவர்கள் கைது
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மானபங்கம் செய்த சந்தேகத்தில் கைதான 5 ஆடவர்கள் மீது நாளை (16 ஜனவரி) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அவர்கள் 29 வயதிற்கும் 47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த மானபங்கச் சம்பவங்களில் 19 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட 3 பெண்களும் 30, 31 வயது நிரம்பிய 2 ஆடவர்களும் பாதிக்கப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதான ஐவருக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுச் சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எந்த இரு தண்டனைகளும் விதிக்கபடலாம்.
காவல்துறை மானபங்கச் சம்பவங்களைத் தடுக்கக் கேளிக்கைக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், சமூகத்தினர் என அனைவருடனும் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் 29 வயதிற்கும் 47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த மானபங்கச் சம்பவங்களில் 19 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட 3 பெண்களும் 30, 31 வயது நிரம்பிய 2 ஆடவர்களும் பாதிக்கப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதான ஐவருக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுச் சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எந்த இரு தண்டனைகளும் விதிக்கபடலாம்.
காவல்துறை மானபங்கச் சம்பவங்களைத் தடுக்கக் கேளிக்கைக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், சமூகத்தினர் என அனைவருடனும் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Others