உணவு, பானக் கடைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் கூடுதல் ஆதரவு
உணவு, பானக் கடைகளுக்கான, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சம்பள உதவி நிதி, 50 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.
உணவு, பானக் கடைகளுக்கான, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சம்பள உதவி நிதி, 50 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.
அடுத்த மாதம் வரை வழங்கப்படும் சம்பளத்துக்கான, 10 விழுக்காட்டு ஆதரவு நிதியை விட அது அதிகம்.
நாளை மறுநாள் நடப்புக்கு வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின்கீழ், உணவு, பானக் கடைகளில் வாடிக்கையாளர்கன் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி இல்லை.
அதனால் பாதிக்கப்படவிருக்கும் வர்த்தகங்களைக் கருத்தில் கொண்டு, அந்த ஆதரவு விரிவுபடுத்தப்படுகிறது.
உணவு, பானக் கடைகளில் வாடிக்கையாளர்கன் அமர்ந்து உணவு உட்கொள்வதற்கு எதிரான தடை நடப்பில் இருக்கும் காலம் வரை, அந்தக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.