"20 வயது பங்களாதேஷ் ஊழியரைத் தாக்கிய ஆடவர் முன்பு மற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறார்"
வாசிப்புநேரம் -
மெக்பர்சன் (MacPherson) வட்டாரத்தில் 20 வயது துப்புரவாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் 62 வயது ஆடவர் இதற்குமுன்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மெக்பர்சன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (Tin Pei Ling) அவ்வாறு கூறினார்.
பங்ளாதேஷைச் சேர்ந்த துப்புரவாளர் அகமது ஷியாமை 62 வயது ஆடவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தின் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை TODAY செய்தித்தளத்திடம் தெரிவித்தது.
பொதுச் சேவை ஊழியர்கள் அவர்களின் வேலையைச் செய்யவிடாமல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 12 மாதச் சிறை, 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மெக்பர்சன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (Tin Pei Ling) அவ்வாறு கூறினார்.
பங்ளாதேஷைச் சேர்ந்த துப்புரவாளர் அகமது ஷியாமை 62 வயது ஆடவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தின் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை TODAY செய்தித்தளத்திடம் தெரிவித்தது.
பொதுச் சேவை ஊழியர்கள் அவர்களின் வேலையைச் செய்யவிடாமல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 12 மாதச் சிறை, 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.