Skip to main content
பொதுத்தேர்தல் 2025: வெற்றிபெறாத கட்சிகள் என்ன செய்யலாம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: வெற்றிபெறாத கட்சிகள் என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தலில் மோசமான முடிவுகளைப் பெற்ற சிறிய அரசியல் கட்சிகள் அவற்றின் பங்கு என்ன என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி யோசிக்கலாம் என்றும் பார்வையாளர்கள் கூறினர்.

சிறிய கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் அல்லது பெரிய எதிர்க்கட்சிகளோடு சேரலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறினர்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி, சீர்திருத்த மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் நான்கு முதல் 13 இடங்களில் போட்டியிட்டன. அவற்றுக்குத் தேசிய அளவில் 0.13 முதல் 2.51% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மக்கள் அந்தக் கட்சிகளை நிராகரித்துவிட்டதையே தேர்தல் முடிவு காட்டுவதாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் எல்வின் ஓங் கூறினார்.

வைப்புத் தொகையைப் பறிகொடுத்த எதிர்க்கட்சிகள் அவற்றின் அரசியல் செயல்பாடு எதிர்த்தரப்பை வலுப்படுத்துகிறதா, பலவீனப்படுத்துகிறதா என்பதை யோசிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்