Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

7 வயதுச் சிறுமியைப் பின்தொடர்ந்து மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 7 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த 57 வயது ரவிச்சந்திரன் சுப்ரமணியத்துக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அந்த நபரின் வயது கருத்தில் கொள்ளப்பட்டதால் பிரம்படிக்குப் பதிலாகக் கூடுதல் 3 மாதச் சிறைத் தண்டனை சேர்க்கப்பட்டுள்ளது. 

நடந்தது என்ன...?

  • இவ்வாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி 7 வயதுச் சிறுமி தின்பண்டங்கள் வாங்கக் கடைக்குச் சென்றுகொண்டிருந்தாள்.
  • அந்நேரத்தில் ரவிச்சந்திரன் அவளை அணுகிக் கடையிலிருந்து திரும்பச் செல்லும்போது அவரைச் சந்திக்கச் சொன்னார்.
  • சிறுமிக்கு அவரைச் சந்திக்க விருப்பமில்லை என்றாலும் ரவிச்சந்திரன் அவளுக்காக அங்குக் காத்துக்கொண்டிருந்தார்.
  • அவள் அவருடன் செல்ல மறுத்தும் அவர் அவளைப் பின்தொடர்ந்தார்.
  • அதை உணர்ந்த சிறுமி உடனே ஓடிச்சென்று அருகிலிருந்த தூணுக்குப் பின்னால் மறைந்திருந்தாள்.
  • பின்னர்,அவள் தனது புளோக்கின் மின்தூக்கியைச் சென்றடைந்தபோது ரவிச்சந்திரன் அவளது கையைப் பற்றிக்கொண்டார்.
  • அவள் அவருடன் மின்தூக்கிக்குள் சென்றாள். மின்தூக்கிக் கதவு மூடியதும் ரவிச்சந்திரன் பலவந்தமாக அவளை மானபங்கம் செய்தார். 
  • சிறுமி அவரது பிடியிலிருந்து தப்ப முயன்றாள்... ஆனால் அவளால் இயலவில்லை. 
  • மின்தூக்கி அவளது மாடியை அடைந்ததும் சிறுமி அவரது பிடியிலிருந்து தப்பி ஓடிச் சென்றாள்.
  • தனது அம்மாவை அழைத்துக்கொண்டே அழுதபடி அவள் வீட்டை நோக்கிச் சென்றாள்
  • கதவைத் திறந்த சிறுமியின் தாயார் ரவிச்சந்திரன் அவளைப் பின்தொடர்வதைப் பார்த்தார்.
  • காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதே நாளன்று ரவிச்சந்திரனைக் காவல்துறை கைதுசெய்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்