Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்கமும் தொழில்துறையும் மேலும் இணைந்து செயல்பட வேண்டும் : கிரேஸ் ஃபூ

வாசிப்புநேரம் -
அரசாங்கங்களும் தொழில்துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தேவை முன்பைவிடத் தற்போது அதிகரித்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெறும் நீடித்த நிலைத்தன்மை மாநாட்டில் அவர் தொடக்க உரை ஆற்றினார்.

அரசாங்கம்-தனியார்த்துறை இடையே நிலவும் பங்காளித்துவத்தின் மூலம் புதிய தீர்வுகளை எட்ட முடியும் என்பதற்கு Suzhou தொழில்துறை பூங்கா, Sino-Singapore Tianjin Eco-City போன்ற திட்டங்களை அவர் உதாரணங்களாகச் சுட்டினார்.

அரசாங்கத்திற்கும் தனியார்த்துறைக்கும் இடையிலான பங்காளித்துவம் இயற்கையான ஒன்றல்ல என்றும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்