"ஹஜ் யாத்திரை ஆயத்தப் பணிகளில் மாற்றமில்லை"
கோப்புப்படம்: Reuters/Saudi Press Agency
This audio is generated by an AI tool.
ஹஜ் யாத்திரைக்கான ஆயத்தப் பணிகள் திட்டமிட்டப்படி நடப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைசல் இப்ராஹிம் (Faishal Ibrahim) கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு அக்கறைகளால் யாத்திரையை ஒத்திவைக்க எண்ணுவோரிடம் பணத்தைத் திரும்பக் கொடுக்க முயற்சி எடுக்கப்படும் என்றார் அவர்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தப் பயண ஏற்பட்டாளர்கள், பயண முகவர்கள் ஆகியோருடன் MUIS எனும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் கலந்துபேசும் என்று டாக்டர் ஃபைசல் கூறினார்.
ஹஜ் யாத்திரையை ஒத்திவைப்போர் அடுத்த ஆண்டு செல்வதற்கு முன்னுரிமை பெறுவர் என்றார் அவர்.
போரை ஒட்டி ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் பதில் சொன்னார்.