Skip to main content
வீட்டைப் புதுப்பித்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

வீட்டைப் புதுப்பித்தல் - சுகமா? சுமையா?

வாசிப்புநேரம் -
வீட்டை விரும்பியவாறு புதுப்பித்து குடியேற வேண்டும் என்பது பலரது கனவு.

ஆனால் அந்தக் கனவை நனவாக்குவது சுகமா? அல்லது சுமையா? சிங்கப்பூரில் அதற்கான செலவு என்ன? அதனை எப்படிச் சமாளிப்பது? அதில் உள்ள சவால்கள் என்ன?

அனுபவங்களைச் "செய்தி"யிடம் பகிர்ந்தனர் சில இளம் தம்பதிகள்.
 
"எதிர்பாராமல் வந்த செலவுகளால் திக்குமுக்காடி விட்டேன்"
"வீட்டைப் புதுப்பிக்க பெரிய அளவில் செலவிட விருப்பமில்லை என்பதால் மிகவும் நிதானமாகத் திட்டமிட்டேன். ஆனாலும் மின்சாரப் பொருள்கள், அதன் இணைப்புகள் பற்றி முதலில் யோசிக்கவில்லை. அதனால் அதிகம் செலவிட நேர்ந்தது. மின்சாரத் தேவைக்கு 5,000 வெள்ளி. மொத்தமாக 30,000 வெள்ளி செலவிட்டேன்" என்றார் விமலா.
"சில வேலைகளை நேரடியாகக் செய்திருந்தால் செலவுகளைக் குறைத்திருக்கலாம்"
"வீட்டைப் புதுப்பிக்கும் வேலையை முழுமையாக உட்புற வடிவமைப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டேன். அதனால் வீட்டுக்குத் தேவையான சில பொருள்களை அவர்தான் வாங்கினார். முதலில் 50,000 வெள்ளி என்று கணக்கிடப்பட்ட செலவு பின்னர் 75,000 வெள்ளிக்கு உயர்ந்தது. நானே நேரடியாக இறங்கி சில வேலைகளைச் செய்திருந்தால் செலவைக் குறைத்திருக்கலாம்".

அடிப்படைச் செலவை முறையாகக் கணக்கிட்டுத் தயார்படுத்திக் கொள்வது அவசியம் என்று பெட்ரிக் சொன்னார்.
"முன்கூட்டியே திட்டமிட்டதால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது"
"சில வேலைகளைக் குறிப்பாகச் சன்னல்களைப் பொருத்த வேறு குத்தகையாளரைப் பயன்படுத்தினேன். HDB வீடுகளில் இருந்த தரைக்கற்களை மாற்றவில்லை. பொருள், சேவை வரி ஒரு விழுக்காடு உயருவதற்கு முன்பே உள்கட்ட வடிவமைப்பாளரை நியமித்துவிட்டேன். இதனால் சுமார் 400 வெள்ளி கூடுதல் செலவைத் தவிர்க்க முடிந்தது"

"செலவுகளைக் கட்டுப்படுத்த விளக்குகள், கழிப்பறைக்கான சில பொருள்களை ஜொகூரில் இருந்து வாங்கிவந்தேன். இணையத்தில் ஆண்டு இறுதி விற்பனையின்போது சில பொருள்களை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தினேன்" என்றார் சைரெஷ்.

செலவுகளைச் சமாளிக்க என்ன செய்யலாம்?
"சேமித்து வைத்த பணம் கைகொடுத்தது"
"அப்போது COVID-19 காலக்கட்டம் என்பதால் வீட்டைப் புதுப்பிக்கும் வேலை தள்ளிப்போனது. அதனை வாய்ப்பாக்கிப் பணத்தைச் சேமித்துவைத்தேன். அந்தப் பணம் பின்னர் உதவியது. அவசர நேரங்களில் சேமிப்புப் பணம் எவ்வாறு உதவும் என்பதை அப்போது உணர்ந்தேன்" என்றார் கந்தேஸ்வரி.
 
"மற்ற செலவுகளை ஈடுகட்ட வங்கியில் சிறு கடனுதவிப் பெற்றேன்"

"வீட்டுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருள்களை மட்டும் முதலில் வாங்கினேன். மற்றப் பொருள்களை வீட்டுக்குக் குடிபுகுந்த பிறகு வாங்கினேன். குளிர்சாதனப் பெட்டி, விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றை வாங்க வங்கிக் கடனுதவி உதவியது" என்று கூறினார் சுனிதா.

"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார்" என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்துக்கு உண்டாகும் செலவைப் போன்ற வீட்டைக் கட்டவும் புதுப்பிக்கவும் பணம் தேவைப்படும். எனவே சரியான திட்டமிடல் அவசியம் என்பதை இவர்கள் சுட்டினர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்