Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொட்டலத்தில் இருப்பது காய்கறி அல்ல கஞ்சா... கண்டுபிடித்த ICA அதிகாரிகள்!

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொட்டலத்தில் கஞ்சாவைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த மாதம் (மே 2024) 11ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது ஒரு பொட்டலத்தில் சில வேறுபாடுகளைக் கவனித்தனர்.

அது பயணப் பை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அது உண்மையல்ல.

பொட்டலத்தை மேலும் சோதித்துப் பார்த்ததில் அதில் காய்கறி போன்ற பொருள் தென்பட்டது.

அது கஞ்சா என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேல் விசாரணைக்காக வழக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்