இன்னும் இரண்டு நாள்களில் சிங்கப்பூரில் i Light ஒளிக்காட்சி!
மரினா பே வட்டாரத்தில் i Light சிங்கப்பூர் ஒளிக்காட்சி மீண்டும் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் (1 ஜூன்) தொடங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 25 ஆம் தேதி வரை நீடிக்கும்.
14 ஒளிரும் கலைப்படைப்புகள் புதிதாக நிறுவப்படும். நகரச் சீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியை DBS வழங்குகிறது.
கலை, தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை ஆகிய கூறுகளை இணைக்கும் வகையில் படைப்புகள் அமையும்.
8 நாடுகளைச் சேர்ந்த 22 கலைஞர்கள் அவற்றை உருவாக்கியுள்ளனர்.
இரவு 7.30 மணியிலிருந்து 11 மணி வரை நிகழ்ச்சி இடம்பெறும்.
வெள்ளி, சனிக்கிழமைகளில் நள்ளிரவு வரை நிகழ்ச்சி நீடிக்கும்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
மேல் விவரங்களுக்கு https://www.ilightsingapore.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.