Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

F1 ஒப்பந்தத்தில் முறைகேடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை: துணைப் பிரதமர் கான்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் F1 கார்ப்பந்தயத்தின் ஒப்பந்தத்தில் எந்தவொரு முறைகேடும் கண்டறியப்படவில்லை எனத் துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) இன்று தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தை ஆராய சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் (STB) சென்ற ஆண்டு (2024) சுயேச்சைக் குழுவை அமைத்திருந்தது.

அரசாங்கம் ஒப்பந்தத்தை முறையாக, கவனமாக அணுகியதாக வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு ஒப்பந்தத்தைச் சரிபார்க்க அரசாங்கம் வெளியிலிருந்து ஒரு வழக்கறிஞரை நியமித்ததை அவர் சுட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா (Edward Chia) எழுப்பிய கேள்விக்குத் திரு கான் பதிலளித்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்