இந்தியாவுடன் சிறப்புப் பயண ஏற்பாடு- பலருக்கு மகிழ்ச்சி
சிங்கப்பூர், இந்தியாவுடன் சிறப்புப் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதை முன்னிட்டு இந்தியா செல்ல இப்போதே பலர் திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.
சிங்கப்பூர், இந்தியாவுடன் சிறப்புப் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதை முன்னிட்டு இந்தியா செல்ல இப்போதே பலர் திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.
நீண்டகாலம் இந்த அறிவிப்புக்காகக் காத்திருந்தவர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் இனி தனிமைப்படுத்திக்கொள்ளும் அவசியமின்றி இந்தியாவிற்குச் சென்றுவர முடியும்.
இத்தகைய சுமுகமான பயணத்திற்காகப் பலநாள் காத்திருந்ததாகப் பலர் கூறினர்.