Skip to main content
உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் புதிய உபகாரச் சம்பளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் புதிய உபகாரச் சம்பளம்

வாசிப்புநேரம் -
உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு புதிய உபகாரச் சம்பளத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திறன்மிகுந்தவர்களை முன்னதாகக் கண்டறிந்து அவர்களைப் பணியமர்த்தும் முயற்சி என்றது உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு.

சிங்கப்பூரின் பாதுகாப்பையும் அரசுரிமையையும் கட்டிக் காக்கும் ஆற்றல் உடையவர்களை இந்தத் திட்டம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாகும் மாணவர்கள் 2,500 வெள்ளி பரிசுத் தொகையும் பெறுவார்கள்.

உள்துறை அமைச்சின் ஒரு பகுதியான உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்புச் சிக்கல்களைக் கையாள்கிறது. சிங்கப்பூருக்கு வரக்கூடிய மிரட்டல்களையும் கண்காணிக்கிறது.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்