அதிரடிச் சோதனையில் 500க்கும் அதிகமானோர் கைது
(கோப்புப் படம்: CNA/Jeremy Long)
This audio is generated by an AI tool.
காவல்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனைகளில் 519 பேர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 1,700 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவர்கள் 15 வயதுக்கும், 85 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த மாதம் சுமார் 4 வாரங்களுக்கு 1,300க்கும் அதிகமான அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.
17,000க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மகளிர் சாசன விதிமீறல்கள், போக்குவரத்துக் குற்றங்கள், மின்-சிகரெட் தொடர்பான குற்றங்கள், குடிநுழைவுக் குற்றங்கள் போன்றவற்றின் தொடர்பில் சோதனைகள் நடத்தப்பட்டன.