கடல் வழியே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA/Gaya Chandramohan)
சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவருக்கு 4 மாதங்கள் 6 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
28 வயது முகமது ரசிடி பின் ரசாக் (Muhammad Rasidi Bin A Razak) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் மலேசியாவைச் சேர்ந்தவர்.
கடந்த மார்ச் மாதம் கியு யுக் ஹுவா, சூரிநாராயணன் சுப்ரமணியம் ஆகிய இருவரும் ரசிடியைத் தொடர்புகொண்டனர்.
ஏப்ரல் 18ஆம் தேதி மீன்பிடிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி அவரைக் கேட்டனர்.
அன்று காலை ரசிடி அவர்களை ஜொகூரில் சந்தித்தார். காலை 8 மணியளவில் மூவரும் புறப்பட்டனர்.
பிற்பகல் 1 மணி வரை மீன் பிடித்தனர்.
சிங்கப்பூரின் வடமேற்குக் கரையோரம் உள்ள புலாவ் சரிம்புன் (Pulau Sarimbun) தீவு அருகே ரசிடி படகைத் திருப்பினார்.
தீவின் கரையிலிருந்து 1 மீட்டர் தூரத்தில் படகு இருப்பதைக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்டனர்.
அதிகாரிகளைப் பார்த்த ரசிடி பதற்றமானார்.
மலேசியக் கடல் எல்லையை நோக்கிப் படகை வேகமாகச் செலுத்தினார்.
அதிகாரிகள் அவருடைய படகைப் பின்தொடர்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.
3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
28 வயது முகமது ரசிடி பின் ரசாக் (Muhammad Rasidi Bin A Razak) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் மலேசியாவைச் சேர்ந்தவர்.
கடந்த மார்ச் மாதம் கியு யுக் ஹுவா, சூரிநாராயணன் சுப்ரமணியம் ஆகிய இருவரும் ரசிடியைத் தொடர்புகொண்டனர்.
ஏப்ரல் 18ஆம் தேதி மீன்பிடிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி அவரைக் கேட்டனர்.
அன்று காலை ரசிடி அவர்களை ஜொகூரில் சந்தித்தார். காலை 8 மணியளவில் மூவரும் புறப்பட்டனர்.
பிற்பகல் 1 மணி வரை மீன் பிடித்தனர்.
சிங்கப்பூரின் வடமேற்குக் கரையோரம் உள்ள புலாவ் சரிம்புன் (Pulau Sarimbun) தீவு அருகே ரசிடி படகைத் திருப்பினார்.
தீவின் கரையிலிருந்து 1 மீட்டர் தூரத்தில் படகு இருப்பதைக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்டனர்.
அதிகாரிகளைப் பார்த்த ரசிடி பதற்றமானார்.
மலேசியக் கடல் எல்லையை நோக்கிப் படகை வேகமாகச் செலுத்தினார்.
அதிகாரிகள் அவருடைய படகைப் பின்தொடர்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஆதாரம் : CNA