Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

‘செய்தி’க்குச் செந்தமிழில்…தாமஸ் ஹிட்டோஷியுடன் ஒரு சந்திப்பு

வாசிப்புநேரம் -
தமிழ் மொழியின் மீது வருணிக்க முடியாத அளவிற்குப் பற்று வைத்திருக்கும் தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruksma) சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

வளர்தமிழ் இயக்கம் அவருடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழர்களைப் பிரமிக்க வைக்கும் அளவிற்குச் சிறப்பாகத் தமிழில் பேசக்கூடியவர் ஜப்பானிய அமெரிக்கரான திரு. ஹிட்டோஷி.

நிகழ்ச்சியில் அவர் வித்தியாசமான முறையில் திருக்குறளைப் படைத்தார்.

குறளின் ஆழம் இன்னும் பலருக்குச் சென்றுசேர நிகழ்ச்சி உதவும் என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. S. மனோகரன்.

இத்தகைய நிகழ்ச்சிகளால் தமிழ் மேல் இளையர்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

நிகழ்ச்சியின் முடிவில் திரு. ஹிட்டோஷியுடன் ‘செய்தி’ பேசியது. கேள்விகளுக்குச் செந்தமிழில் பதிலளித்து அசத்தினார் அவர்.

கண்டு ரசிக்கலாம்… காணொளியில்!
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்