Skip to main content
"சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"சிங்கப்பூர்-ஜொகூர் பாலம் பலரின் வாழ்க்கையைச் செதுக்கிய பாலம்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-ஜொகூர் பாலம் திறக்கப்பட்டு இன்றோடு 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் இப்போது உலகின் ஆகப் பரபரப்பான கடல் பாலங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

ஆனால் பாலம் நிறுவப்படுவதற்கு முன் மக்கள் கப்பல்களில் பயணம் செய்தனர்... பொருள்களும் அப்படித்தான் அனுப்பப்பட்டன.

நாளடைவில் மக்களின் எண்ணிக்கையும் பொருள்களின் அளவும் அதிகரித்தன.

அதனைச் சமாளிக்கவே பாலம் கட்டப்பட்டது.

முதலில் வாகனங்கள் சென்று வருவதற்கும் ஒரு தடம் அமைக்கப்பட்டது.

ஆனால் இப்போது 6 தடங்கள் இருக்கின்றன.

தினமும் சுமார் 300,000 பேர் பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.

அவர்களில் 45 விழுக்காட்டினர் பேருந்தில் பயணம் செய்பவர்கள் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்