Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி வீட்டில் தீ - ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்

வாசிப்புநேரம் -

ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் புளோக் 723, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5-இல் (Block 723, Jurong West Ave 5) நேர்ந்தது.

அது குறித்து அதிகாலை 6.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.

வீட்டின் பொது அறையில் இருந்த மின் சைக்கிளின் மின்கலன் தீப்பற்றிக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ மூண்டபோது மின்கலன் மின்னூட்டம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

வீட்டில் இருந்த 6 பேரும் அதிகாரிகள் வந்தடைவதற்கு முன்பே வெளியேறிவிட்டனர்.

அவர்களில் ஐவர் புகையை நுகர்ந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அக்கம்பக்க வீடுகளில் வசித்த 45 பேர் சுயமாக வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

- CNA/az(aj)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்