வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பிள்ளைகளுக்குப் பலன்தரும் KidSTART திட்டம்
SP குழுமத்தின் KidSTART திட்டத்தின்மூலம் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரம் பிள்ளைகள் பலன் பெறவிருக்கின்றனர்.
ஆரம்பகாலப் பிள்ளைப்பருவத் திட்டத்துக்கு ஆதரவாக அந்த நிறுவனம் மேலும் 1.1 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.
பிள்ளைகளின் கல்விக்கும் அவர்களின் கற்றல் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அந்த நிதி பயன்படுத்தப்படும்.
சென்ற ஆண்டு வழங்கிய ஒரு மில்லியன் தொடக்க நிதியுடன் தற்போது கூடுதல் நிதியளித்திருக்கிறது SP குழுமம்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்குக் கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.
பிள்ளைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தும் KidSTART கடல் சாகச இருவழி விளையாட்டுக்கும் நிதி செலவிடப்படும்.
பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க KidSTART கதைகள் எனும் புதிய முயற்சி இந்த ஆண்டின் பிற்பாதியில் தொடங்கப்படும்.