Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிளமெண்டியில் கத்திக்குத்துத் தாக்குதல் - இருவர் கைது

வாசிப்புநேரம் -
கிளமெண்டியில் கத்திக்குத்துத் தாக்குதல் - இருவர் கைது

(கோப்புப் படம்)

கிளமெண்டியில் கத்திக்குத்துத் தாக்குதலின் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபாயமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

நேற்றுக் காலை பத்தரை மணியளவில், Commonwealth Avenue Westஇல் உள்ள Block 413இல் கத்திக்குத்துச் சம்பவம் பற்றிக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர், அடுக்குமாடிக் கார் நிறுத்துமிடத்தை நோக்கிச் சென்றபோது, இருவர் அவரை அணுகினர்.

அவர்களில் ஒருவர், பாதிக்கப்பட்டவரைப் பின்னாலிருந்து கத்தியால் தாக்கினார். இடக் கையிலும் பின்புறத்திலும் கத்தியால் அவர் குத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பாதிக்கப்பட்டவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

முதற்கட்ட விசாரணையில், அது திட்டமிட்ட தாக்குதல் என்று தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.

சந்தேக நபர்களில் ஒருவரின் வயது 26. மற்றவரின் வயது 28. அந்த இரு ஆடவர்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்