Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காப்பிக் கடைக்கு அருகில் கத்திக் குத்து - 50 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -

காப்பிக் கடையில் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜாலான் புக்கிட் மேரா, புளோக் 111இல் நடந்த அந்தச் சம்பவம் குறித்து, இன்று (29 ஜூன்) காலை 11.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

அந்த நபர், 75 வயதான இன்னோர் ஆடவரின் தலையைக் கத்தியைக் கொண்டு தாக்கியதாய்ச் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

காயமடைந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், காப்பிக் கடைக்கு அருகில் உள்ள நடைபாதையில் ஆடவர் ஒருவர் இன்னொருவரை நோக்கிச் செல்கிறார்.

அவரது கையில் கத்தியைப் போன்ற ஒன்று தெரிகிறது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் சிலர் அவரை நோக்கி நற்காலிகளை வீசுவது தென்படுகிறது.

காணொளியில் ஆடவர் ஒருவருக்கு தலையிலிருந்து ரத்தம் கசிவதும் தெரிகிறது. அவருக்குச் சிலர் உதவுவதையும் பார்க்கமுடிகிறது. 

தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை 7 பேர் கட்டுப்படுத்தும் காட்சியும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் குறித்த காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்