ஆசியான் கிண்ணக் காற்பந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வியுற்ற சிங்கப்பூர் அணி

CNA
ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கும் வியட்நாமுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி தோல்வி கண்டுள்ளது.
போட்டியில் வியட்நாம் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (29 டிசம்பர்) வியட்நாமில் இடம்பெறும்.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லந்தும் பிலிப்பீன்ஸும் மோதுகின்றன.