Skip to main content
அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி - $1.7 மில்லியன் இழப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் 1.7 மில்லியன் வெள்ளி பறிபோயிருக்கிறது.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் நாணய வாரியம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், Income Insurance, UnionPay ஆகியவற்றின் அதிகாரிகள் போல் நடித்து மோசடிக்காரர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

+65 அல்லது 8 என்ற எண்ணிலிருந்து மோசடிக்காரர்கள் அழைக்கலாம்.

காப்புறுதிக்கான சந்தா செலுத்தப்படாமல் இருப்பதாகவோ, காப்புறுதித் திட்டம் காலாவதியாவதாகவோ சொல்லி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நாணய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்