அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி - $1.7 மில்லியன் இழப்பு
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் 1.7 மில்லியன் வெள்ளி பறிபோயிருக்கிறது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய வாரியம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், Income Insurance, UnionPay ஆகியவற்றின் அதிகாரிகள் போல் நடித்து மோசடிக்காரர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
+65 அல்லது 8 என்ற எண்ணிலிருந்து மோசடிக்காரர்கள் அழைக்கலாம்.
காப்புறுதிக்கான சந்தா செலுத்தப்படாமல் இருப்பதாகவோ, காப்புறுதித் திட்டம் காலாவதியாவதாகவோ சொல்லி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நாணய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய வாரியம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், Income Insurance, UnionPay ஆகியவற்றின் அதிகாரிகள் போல் நடித்து மோசடிக்காரர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
+65 அல்லது 8 என்ற எண்ணிலிருந்து மோசடிக்காரர்கள் அழைக்கலாம்.
காப்புறுதிக்கான சந்தா செலுத்தப்படாமல் இருப்பதாகவோ, காப்புறுதித் திட்டம் காலாவதியாவதாகவோ சொல்லி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நாணய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதாரம் : CNA