இம்மாதம் 14ஆம் தேதி பொங்கல் திருநாள்.
அதனை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் வரும் 8ஆம் தேதி ஒளியூட்டு நடைபெறவிருக்கிறது.
(படங்கள்: ஷரளாதேவி)
குடம் என்பதை கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டுக்கான அலங்காரங்கள் அமைந்துள்ளன.
பொங்கல் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் மாடுகளும் இவ்வாண்டு அலங்காரங்களில் இடம்பெற்றுள்ளன.
ஒளியூட்டை அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில், விழாக்காலத்தில் லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.