உள்ளூர் நிறுவனங்களுக்கு $40 மில்லியன் நிதி ஆதரவு
This audio is generated by an AI tool.
கட்டுமானச் சூழல், வேளாண் தொழில்நுட்பம், சுற்றுப்புறச் சேவைகள் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்கள் புதிய 40 மில்லியன் வெள்ளி நிதியாதரவைப் பெறவுள்ளன.
உள்ளூர் நிறுவனங்கள் தங்களின் சேவைகளை விரிவுபடுத்தவும் புதிய தீர்வுகளை விளம்பரப்படுத்தவும் அது ஆதரவு வழங்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் இணைந்து நிதியாதரவுத் திட்டத்தை அறிமுகம் செய்கின்றன.
வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுவனங்கள் அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிறுவனங்கள் சந்தையில் தடம்பதிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன.
அவற்றைப் போக்க அரசாங்கம் துணைபுரியும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறினார்.