சிங்கப்பூரில் காதல் மோசடிகளில் 15 மில்லியன் வெள்ளிக்குமேல் இழப்பு
சிங்கப்பூரில் இணையத்தில் காதல் மோசடி செய்பவர்களிடம் இவ்வாண்டு மட்டும் குறைந்தது 384 பேர் ஏமாந்துள்ளனர்.
அவர்கள் பறிகொடுத்த பணத்தின் மதிப்பு 15 மில்லியன் வெள்ளிக்கும் மேல்.
எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை வழங்கியது.
இணையத்தில் புதிதாக ஒருவரோடு நட்பு கொள்ளும்போது கவனம் தேவை.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பணம் அனுப்பாதீர்கள்.
சந்தேகம் வரும்போது அரசாங்க அமைப்புகளோடு தொடர்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்துங்கள் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.