பணிப்பெண்ணைக் கொன்றதை ஒப்புக்கொண்ட மாதின் கணவர் காவல்துறையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்
இல்லப் பணிப்பெண்ணைக் கொன்றதை ஒப்புக்கொண்ட மாதின் கணவர்,2016-ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

(படம்: Nisha Karyn)
இல்லப் பணிப்பெண்ணைக் கொன்றதை ஒப்புக்கொண்ட மாதின் கணவர்,2016-ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அது குறித்துக் காவல்துறை தகவல் வெளியிட்டது.
மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண், பியாங் கெய் டோன் (Piang Ngaih Don) 2015-ஆம் ஆண்டிலிருந்து, காய்த்திரி முருகையன் என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தார்.
அவர் வேலையில் சேர்ந்து சில மாதங்களிலேயே துன்புறுத்தலுக்கு ஆளானார்.
பணிப்பெண் 2016-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி அன்று மாண்டார்.
பணிப்பெண்ணைத் துன்புறுத்திக் கொன்றதைக் காய்த்திரி நேற்று ஒப்புக்கொண்டார்.
காய்த்திரியின் கணவரான ஸ்டாஃப் சார்ஜண்ட் (staff sergeant) கேவின் செல்வம், ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி அன்று காவல்துறையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பணிப்பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக, செல்வன் மீது 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் பணிப்பெண்ணைப் விளையாட்டுப் பொருளைக் கொண்டு தாக்கியதோடு, காவல்துறையிடம் வீட்டில் கண்காணிப்புக் கேமரா இல்லை என்று பொய் கூறியதாகவும் சந்தேகிக்கப்பட்டது.
விசாரணைக்கு முந்தைய சந்திப்பில் ஈடுபடுவதற்கு, செல்வன் அடுத்த மாதம் 2-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.
அதிகாரிகள் எப்போதும் சட்டத்தைப் பின்பற்றவேண்டும்; மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் காவல்துறை கூறியது.
சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது சொன்னது.