Skip to main content
பூனையின் வீடுகளுக்குத் தீவைத்த ஆடவருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பூனையின் வீடுகளுக்குத் தீவைத்த ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
பூனையின் வீடுகளுக்குத் தீவைத்த ஆடவருக்குச் சிறை

CNA/Syamil Sapari

வெளியீடு : 04 Aug 2026 03:00PM புதுப்பிப்பு : 04 Aug 2026 03:01PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புளோக்கின் வெற்றுத்தளத்தில் பூனைகளின் வீடுகளுக்குத் தீவைத்த ஆடவருக்கு 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக் புளோக்குகளின் வெற்றுத்தளங்களில் அட்டையால் செய்யப்பட்ட குட்டி வீடுகள் பூனைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு அருகே தண்ணீரும் உணவும் அடிக்கடி வைக்கப்படுவதுண்டு.

பூனைகள் மட்டுமல்லாமல் பறவைகளும் தொந்தரவை ஏற்படுத்தும் பிராணிகளும் ஈர்க்கப்படுவதாக 68 வயது கோ தெங் பூ எண்ணினார்.

அதையொட்டிப் புகார் அளித்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொன்ன கோ, சினம் கொண்டார்.

அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடுகளை எரிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் வீடுகளை  ஒரு தொட்டியில் வைத்து எரித்த அவர் பின்னர் வீடுகள் இருந்த இடத்திலேயே தீமூட்ட ஆரம்பித்தார்.

அத்தகைய ஒரு சம்பவத்தில் தரையும் சுவர்களும் சேதமடைந்தன.

அதற்கு ஜூரோங்-கிளமெண்டி-புக்கிட் பாத்தோக் நகர மன்றம் சுமார் 900 வெள்ளி செலவு செய்தது.

பொருள்களுக்குத் தீவைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்