தானா மேரா ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த ஆடவர்
வாசிப்புநேரம் -
Facebook/Tiagong
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் தானா மேரா (Tanah Merah) ரயில் நிலையத்தில் ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்திருக்கிறார்.
அதனைப் பார்த்த பயணி ஒருவர் அந்தக் காணொளியை Facebookஇல் பகிர்ந்தார்.
சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த SMRT நிறுவனம் அது போன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாது என
8 World செய்தித்தளத்திடம் கூறியது.
ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த ஆடவர் பொது இடத்தை அசுத்தப்படுத்தியதாக நிறுவனம் சொன்னது.
அதுபோக அவரது நடத்தை சகப் பயணிகளின் சுகாதாரத்திற்கும் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் அது குறிப்பிட்டது.
சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாய் SMRT நிறுவனம் தெரிவித்தது.
விசாரணை தொடர்வதாக 8 World செய்தித்தளம் கூறியது.
அண்மையில் ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த ஆடவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதனைப் பார்த்த பயணி ஒருவர் அந்தக் காணொளியை Facebookஇல் பகிர்ந்தார்.
சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த SMRT நிறுவனம் அது போன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாது என
8 World செய்தித்தளத்திடம் கூறியது.
ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த ஆடவர் பொது இடத்தை அசுத்தப்படுத்தியதாக நிறுவனம் சொன்னது.
அதுபோக அவரது நடத்தை சகப் பயணிகளின் சுகாதாரத்திற்கும் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் அது குறிப்பிட்டது.
சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாய் SMRT நிறுவனம் தெரிவித்தது.
விசாரணை தொடர்வதாக 8 World செய்தித்தளம் கூறியது.
அண்மையில் ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த ஆடவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஆதாரம் : Others