சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கு COVID-19 உறுதி
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கு (Masagos Zulkifli) COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொண்டை வலியும் காய்ச்சலும் இருப்பதாக அவர் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.
இருமுறை தடுப்பூசியும் booster என்ற கூடுதல் தடுப்பூசியும் ஏற்கனவே போட்டுக்கொண்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளுக்குத் தம்மால் நேரில் வரமுடியாது என்று அவர் சொன்னார்.
அவற்றைத் திட்டமிட்டிருந்த ஏற்பாட்டாளர்களிடம் திரு. ஸுல்கிஃப்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரின் குடும்பங்களைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளும் அதில் அடங்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்த ஆண்டைச் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களைக் கொண்டாடுவதற்கான ஆண்டாக அர்ப்பணித்துள்ளது.
-CNA/ng(aj)