Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவலின்போது ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்த அயராது பாடுபட்டோருக்கு மே தின விருதுகள்

வாசிப்புநேரம் -

கிருமிப்பரவலின்போது ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்த அயராது பாடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் மே தின விருந்து வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சவால் மிகுந்த பொருளியல் சூழலுக்கு இடையே ஊழியரணிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புக்காகவும் அந்த அங்கீகாரம். 

கிருமிப்பரவலுக்குப் பிறகு முதன்முறையாக விருது நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்பட்டது. 

இதுவரை இல்லாத வகையில், 149 பேர் விருது பெற்றனர். 

தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள், ஊழியர்கள் என்று பல தரப்பினர் விருது பெற்றனர். 

உயரிய 16 விருதுகளில் ஒன்று, பொதுப் போக்குவரத்து மன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் ரிச்சர்ட் மேக்னஸுக்கும் வழங்கப்பட்டது. 

பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எடுத்த பல்வேறு முயற்சிகளுக்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.  

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்