மொறுமொறு மேரி பிஸ்கட், காகிதக் கப்பல்... பார்க்கில் பெரிதாய்ப் பொருத்திப் பார்க்க வைத்தனர்
தேசியக் கலை மன்றம் பலரையும் பழைய இனிய ஞாபகங்களில் ஆழ்த்த "As You Were" - நீ இருந்ததைப் போலவே - என்ற புதியதொரு கலைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் பீஷான்-அங் மோ கியோ பூங்கா, ஜூரோங் லேக் பூங்காக்கள், பொங்கோல் வாட்டர்வே பூங்கா (Bishan-Ang Mo Kio Park, Jurong Lake Gardens, Punggol Waterway Park) ஆகிய பூங்காக்களில் சிறப்புக் கலைப் படைப்புகள் பொருத்தப்பட்டன!
என்ன, எங்கே, யார்?
பீஷான்-அங் மோ கியோ பூங்கா
- பாதி உண்ணப்பட்ட மேரி பிஸ்கட் (Marie Biscuit)
- உருவாக்கியவர் டானியல் சோங் (Daniel Chong)
பூங்காவுக்குச் சென்று பிடித்தவர்களுடன் நேரம் செலவழித்து மேரி பிஸ்கட் ஒன்றைச் சாப்பிடும் வேளையில் அதைத் 'தொப்' என்று புல்லில் ஒரு சிலர் கைதவறிப் போட்டிருக்கலாம்...
அதுபோன்ற எளிய, எழில்மிக்க தருணங்களை நினைத்து ஏங்கும் நெஞ்சங்களுக்குப் படைக்கப்பட்ட கலைப்பொருள்...
- என்னைக் கேட்க முடிகிறதா? (Can You Hear Me)
- உருவாக்கியவர்கள் குவெக் ஜியா ஜி, ஆரன் லிம் (Quek Jia Qi, Aaron Lim)
தொலைபேசியின் நச்சரிப்பு இல்லாத உலகத்தில் சிறு பிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக குவளை-கயிற்றுத் தொலைபேசி பயன்படுத்தப்பட்டது.
குவளைக்குள் ஒருவர் "என்னைக் கேட்க முடிகிறதா?" என்று கேட்க... இன்னொருவர் கேட்டுக்கொண்டே சிரிக்க... அது ஓர் இனிய காலம்!
ஜூரோங் லேக் பூங்கா (Jurong Lake Gardens)
- கனவு தொடரவேண்டும் (Our Dreams Must Continue)
- உருவாக்கியவர் தியோ ஹுவே லிங் (Teo Huey Ling)
பகல் கனவு காணும்போது கேலிச்சித்திரப் படங்களில் கதாபாத்திரத்தின் தலைமேல் ஒருவிதக் குமிழி தோன்றும் அல்லவா?
குமிழிக்குள் பல நிறங்களில் அழகிய வடிவங்களைப் போலவே கலைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கோல் வாட்டர்வே பார்க் (Punggol Waterway Park)
- மிதக்கிறேன் (Afloat)
- உருவாக்கியவர் அங் சொங் நியன் (Ang Song Nian)
எட்டு மீட்டர் நீளமுள்ள காகிதக் கப்பல் உருவத்திலான மிதவை... கப்பலின் பெரும்பகுதி முகக்கவச உருவத்திலானது..
கிருமிப்பரவல் சூழலில் நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருந்த முக்கக்கவசம் நம்மை மூழ்கவிடாமல் மிதக்க உதவியது என்பதை அது குறிக்கிறது.
- மதிய விளையாட்டு [n o o n (at play)]
- உருவாக்கியவர்கள் ஹேசல் லிம், அடலின் குவே (Hazel Lim, Adeline Kueh)
2 பலகை ஊஞ்சல்கள் - விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான பாலத்தைப் போன்று செயல்படும் உணர்வை வெளிக்கொணர அமைக்கப்பட்ட கலைப்பொருள்கள்...