Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒன்றரை ஆண்டுச் சம்பளத்துக்கு நிகரான தொகையைப் போட்டியில் வென்ற வெளிநாட்டு ஊழியர்!

வாசிப்புநேரம் -
இந்தியாவைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் (Selvam Arumugam) அண்மையில் சிங்கப்பூரின் Pollisum Engineering நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் 18,888 வெள்ளி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

அந்தப் பரிசுத்தொகை அவரது 1.5 ஆண்டுச் சம்பளத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது.

செல்வத்தை வெற்றியாளராக அறிவித்ததும் அவர் மண்டியிட்டுக் கண்ணீர் சிந்தியதைக் காட்டும் காணொளி TikTokஇல் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

பிரபலத் தென் கொரிய 'Squid Game' நாடகத் தொடரை மையமாக வைத்துப் போட்டியாளர்கள் பல சவால்களைச் சந்தித்து அதில் வெற்றிபெற வேண்டியிருந்தது.

செல்வம் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கெடுத்து வெற்றிவாகை சூடினார்.

பரிசுத்தொகையைக் கொண்டு நிலத்தை வாங்கி இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு வீடு கட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.

தம்மைச் சார்ந்து 17 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் பரிசுத்தொகை தமது நீண்டநாள் கனவை நனவாக்க உதவும் என்றும் செல்வம் கூறினார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்