Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காலாங் பாருவில் மானபங்கச் சம்பவம்... சந்தேக நபர் கைது

வாசிப்புநேரம் -

காலாங் பாருவில் இடம்பெற்றதாக நம்பப்படும் மானபங்கச் சம்பவத்தின் தொடர்பில் 35 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அதுகுறித்து நேற்று (22 நவம்பர்) காலை 10.30 மணி வாக்கில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. 

காலாங் பாரு வட்டாரத்தில் ஒரு பெண் நேற்று முன்தினம் (21 நவம்பர்) மானபங்கம் செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. 

தொடர் விசாரணைகள், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் ஆகியவற்றின் மூலம் மத்தியக் காவல்துறைப் பிரிவு, காவல்துறைக் கட்டளை நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள், புகார் அளிக்கப்பட்ட ஏழே மணி நேரத்துக்குள் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர். 

அவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

சந்தேக நபர் மீது நாளை (24 நவம்பர்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டுமுதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்