Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவிகள்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன.

புதிதாகத் தொடங்கும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும்.

தரவுத் திரட்டு, தயாரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களில் A-I Singapore ஆய்வு நிலையம், நிறுவனங்களுக்குப் பயிற்சி வழங்கும்.

அவற்றின் துணைகொண்டு, நிறுவனங்கள் வர்த்தகங்களை உருமாற்றுவதற்கான தீர்வுகளைப் பெறலாம்.

அதற்கான முயற்சியில் ஆய்வு நிலையம், Temus தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.

எதிர்பார்க்கும் தீர்வுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்காதபோது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நூறு நிறுவனங்கள் வரை நிதி ஆதரவு பெறமுடியும்.

அத்துடன் 400க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் விரிவான பயிற்சியும் பெறவுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்