Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மியன்மார் பணிப்பெண்ணைத் துன்புறுத்தி, கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை

மியன்மார் பணிப்பெண்ணை 14 மாதக் காலத்திற்குத் துன்புறுத்தி, கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார் பணிப்பெண்ணைத் துன்புறுத்தி, கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை

(படம்: Facebook/Helping Hands for Migrant Workers, Singapore and Nisha Karyn)

மியன்மார் பணிப்பெண்ணை 14 மாதக் காலத்திற்குத் துன்புறுத்தி, கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற பிப்ரவரி மாதம், 41 வயது காயத்திரி முருகையன், நோக்கமில்லாக் கொலை, பட்டினிபோட்டு வேண்டுமென்றே காயப்படுத்தியது, சூடான பொருள் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியது உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

2016ஆம் ஆண்டு, ஜூலை 26ஆம் தேதி மியன்மாரைச் சேர்ந்த 24 வயதுப் பணிப்பெண் பியாங் நகெய் டோன் (Piang Ngaih Don) காயத்திரியாலும் காயத்திரியின் தாயாராலும் தாக்கப்பட்டு மாண்டார்.

2015ஆம் ஆண்டு, மே மாதம் காயத்திரியிடம் வேலை செய்ய அவர் சிங்கப்பூர் வந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதில், காயத்திரியின் மனநலப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனநலச் சிகிச்சையால் அவரிடம் நல்ல மாற்றம் தென்படுவதாலும், அவரால் பொதுமக்களுக்கு ஆபத்தோ குற்றம் புரியும் அபாயமோ இல்லை என்பதாலும் ஆயுள் தண்டனை பொருத்தமற்றது என்று நீதிபதி கூறினார்.

காயத்திரியின் கணவர், தாயார் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்