Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதுப்பிப்புப் பணிக்காக மூடப்படும் UOB தென்கிழக்காசியக் காட்சிக்கூடம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் தென்கிழக்காசியக் காட்சிக்கூடம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படவிருக்கிறது.

காட்சிக்கூடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மூடப்பட்டிருக்கும்.

புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்படவிருக்கிறது.

முன்னைய உச்சநீதிமன்றப் பிரிவின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் மாடிகளில் உள்ள அனைத்துக் காட்சிக்கூடங்களும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

எனினும் கலைப் பிரியர்கள் குறிப்பிட்ட சில படைப்புகளைத் தொடர்ந்து காணலாம்.

அவற்றைக் காட்சிக்கு வைக்கும் தற்காலிகக் காட்சிக்கூடம் அக்டோபர் மாதம் திறக்கப்படும்.

UOB தென்கிழக்காசியக் காட்சிக்கூடம் இந்த வட்டாரக் கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டுள்ளது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்