Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தின அணிவகுப்பு - நேரடியாகவும் காணொளி வழியாகவும் கலந்துகொள்ளும் 2,000 பேர்

வாசிப்புநேரம் -

இவ்வாண்டின் தேசிய தினத்தன்று 37 குழுக்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அணிவகுப்பில் கலந்துகொள்கின்றனர்.

நேரடியாகவும் காணொளி வழியாகவும் கலந்துகொள்ளும் குழுக்கள், இளையர், சமூகம், பொருளியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், 55 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தேசியச் சேவை தொடர்பான சிறப்பு சமர்ப்பண நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதை அனுசரிக்கும் வகையில் தேசிய சேவையை முடித்த லெப்டினன்ட் கர்னல் டெஸ்மண்ட்  ஃபூ (Lieutenant Colonel (NS) Desmond Fu) அணிவகுப்பை வழிநடத்துவார்.

முன்னாள், தற்போதைய தேசிய சேவையாளர்களின் பங்களிப்பும் தியாகங்களும் அவர்களின் குடும்பங்களும் அதில் அங்கீகரிக்கப்படும்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பும் முழுமைத் தற்காப்பின் காட்சி அங்கமும் ஒருங்கிணைப்பட்டு, 'நம் நாட்டின் வலிமை' எனும் பெயரில் ஒன்றாக நடத்தப்படும்.

ராணுவத்தைச் சேர்ந்தோரும் பொதுமக்களும் சிங்கப்பூரைப் பாதுகாக்க கொண்டுள்ள வலிமையையும் கடப்பாட்டையும் அந்த அங்கம் அங்கீகரிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்